டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இரு சக்கர வாகனம் மீது மணல் லாரி மோதல்: 2 குழந்தைகளுடன் தந்தை பலி

திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
இரு சக்கர வாகனம் மீது மணல் லாரி மோதல்: 2 குழந்தைகளுடன் தந்தை பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மாரிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(35). இவர் திருவள்ளூரில் இருந்து கிராமத்திற்கு தனது மனைவி சங்கீதா (33), தனது இரு குழந்தைகள் என 4 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருவள்ளூர் - கடம்பத்தூர் சாலையில் திருப்பாச்சூர் அருகே செல்லும் போது எதிரே வேகமாக வந்த மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது குழந்தைகள் தனுஜாஸ்ரீ (3), தருண் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Story image

இந்த நிலையில் சம்பவம் அறிந்த திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை சேரவிடாமல் அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். 
அதைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்த ஜெகதீஷ் மனைவி சங்கீதாவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவல்துறையினர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.