பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சிவானந்தம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :17 மார்ச் 2021, 10:47 am

DIN

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சிவானந்தம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொருளாளரான கே.சிவானந்தம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன்போது, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலர் வ.ப.சண்முகம், கிழக்கு மாவட்ட துணைச் செயலர் ஏ.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சிவானந்தம், வெள்ளகோவில் பகுதியில் வறண்டு கிடக்கும் வட்டமலைக் கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன், காங்கயம் பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்களுக்குப் பதிலாக, மாற்று வழியாக புதைவட கம்பி மூலம் மின்சாரம் எடுத்துச் செல்ல வலியுறுத்துவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.