திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு வேட்புமனு தாக்கல்
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கே.என். நேரு வேட்பு மனு தாக்கல்

கே.என். நேரு வேட்பு மனு தாக்கல்
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வாகனங்களில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு முன்பாகவே ஊர்வலத்தில் வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து இருவருடன் சென்று கே.என். நேரு வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலரான விசுவநாதனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. திருச்சியை முன்மாதிரி நகரமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...