நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. 



சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவின் நான்காம் திருநாளான இம்மாதம் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி -   அம்பாள் ரத வீதிகளில் திருவீதி உலா வர உள்ளனர். 10ம் திருநாளான இம்மாதம் 27ஆம் தேதி  இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com