தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை

புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை சார்பில் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2021, 4:12 pm

DIN

புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை சார்பில் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
புதுவையில் நீண்டநாள்களுக்குப் பிறகு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 
புதன்கிழமை புதிதாக 52 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக குறைவான எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்த கரோனா தொற்று, தற்போது 50-ஐ கடந்திருப்பது, மாநிலத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதையே காண்பிக்கிறது. 
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை ஆளுநரிடன் அளித்துள்ளார். 
அதில், பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும் புதுச்சேரி பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.