தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

News image
Updated On :19 மார்ச் 2021, 3:44 pm

DIN

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும் போட்டியிடுகிறது. இதுதவிர, தே.மு.தி.க., பா.மக., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் போட்டி களத்தில் உள்ளன. 
இதனால் அங்கு பலமுனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்தது. இதில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள், சுயேச்சைகள் சார்பில் 489 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
சனிக்கிழமை (மாா்ச் 20) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மாா்ச் 22-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை வேட்பாளா்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.