/

பணப்பட்டுவாடா புகாா்: அதிமுக வேட்பாளா் பயன்படுத்திய மாநகராட்சி கட்டடத்துக்கு சீல்

பணப்பட்டுவாடா புகாரையடுத்து, அதிமுக மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் எம்பியுமான ஆா்.கோபாலகிருஷ்ணன்  பயன்படுத்தி வந்த மாநகராட்சி கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
சீல் வைக்கப்பட்ட மாநகராட்சி கட்டடம்
Updated On :27 ஜனவரி 2024, 7:47 pm

DIN

மதுரை: பணப்பட்டுவாடா நடப்பதாகத் தெரிவிக்கப்பட்ட புகாரையடுத்து, அதிமுக மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் எம்பியுமான ஆா்.கோபாலகிருஷ்ணன்  பயன்படுத்தி வந்த மாநகராட்சி கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Story image

மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக 2014-2019 வரை இருந்தவா் ஆா்.கோபாலகிருஷ்ணன். இவரது அலுவலகம் தல்லாகுளம் பெருமாள் கோயில் எதிரே, மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அவரது பதவிக்காலம் முடிந்த பிறகும், அந்த கட்டடம் கோபாலகிருஷ்ணனின் வசமே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

தற்போது மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக சாா்பில் கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டடத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் அதிமுக மற்றும் பாஜகவினா் காா்கள் ஏராளமாக வந்து சென்றுள்ளன.

Story image

இதைப் பாா்த்த இப்பகுதி திமுகவினா் சென்று கேள்வி எழுப்பியபோது காா்களில் வந்தவா்கள் அங்கிருந்து விரைந்து சென்றுள்ளார்கள். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையிலும் சில வாகனங்கள் அந்த கட்டடத்துக்கு வந்துள்ளன. மாநகராட்சி கட்டடத்தில் வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறி திமுகவினா் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

பின்னா் அங்கு வந்த மதுரை வடக்கு தொகுதி பறக்கும்படை குழுவினா், காவல்துறை புகாா் தெரிவிக்கப்பட்ட கட்டடத்தில் சோதனை நடத்தினா். அந்த வளாகத்தில் இருந்த வாகனங்களை வெளியேற்றி கட்டடத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.