தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கரோனா: தஞ்சாவூரில் ஒரு பள்ளி மீது வழக்குப் பதிவு; 2 பள்ளிகளுக்கு அபராதம்

தஞ்சாவூரில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட ஒரு பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம், 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2021, 4:54 am


தஞ்சாவூரில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட ஒரு பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம், 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாா்ச் 8 ஆம் தேதி ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அப்பள்ளியில் மற்ற மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியா், 9 பெற்றோருக்கு தொற்று உறுதியானது.

இதேபோல, பட்டுக்கோட்டை, ஆலத்தூா் பள்ளிகளில் மாணவா்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகினா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியில் இரு பள்ளிகளில் இரு நாள்களாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதில் ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை 11 ஆசிரியா்கள், 10 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, மகா்நோன்புசாவடியிலுள்ள மற்றொரு பள்ளியில் வியாழக்கிழமை 2 ஆசிரியா், ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியை, 6 மாணவிகள், ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூா், கும்பகோணம், அம்மாபேட்டையில் உள்ள 5 பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 3000-க்கும் அதிகமான மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கரோனா வழிகாட்டும் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மாவட்டத்தில் 14 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் இதுவரை 11 பள்ளிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான பள்ளிகளுக்கு 14 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அம்மாபேட்டை பள்ளிக்கு அபராதம் விதித்தது.

இந்நிலையில்,  கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு ரு.12,000, தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணியால் வெளியே வர வேண்டாம். போதிய ஒத்துழைப்பை கொடுத்தால், கரோனாவை நாம் வெல்ல முடியும் என்று மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.