ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தேர்தல் விதிமுறைகள், கரோனா கட்டுப்பாடுகள் இன்றி தேர்தல் பிரசாரம்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா கட்டுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பிரசாரம் செய்த அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On :21 மார்ச் 2021, 8:26 am

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா கட்டுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவுற்று தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

தேர்தல் பிராசரத்தின்போது அரசியல் கட்சியினர்களால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சென்று பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 சதவிகிதத்திற்கு மேல் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகளும் முன் வருவதில்லை.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபாரதம் விதிக்கு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எந்த பறக்கும்படையும் சோதனை செய்து அபராதம் பிறப்பித்ததாக தெரியவில்லை.

தேர்தல் பறக்கும்படையினர் அப்பாவி வியாபாரிகளிடம்தான் பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. இதுவரை அரசியல் கட்சியினரிடம் பணம் வசூலித்ததாக வரலாறு இல்லை.

தற்போது கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் வேளையில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எந்த பிரசாரக் கூட்டத்திலும் பெரும்பான்மையான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கரோனா தொற்று கடலூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.