அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரதமர் மோடி மே 30-இல் கன்னியாகுமரி வருகை: 3 நாள்கள் தியானம்

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 மார்ச் 2021, 1:41 pm

DIN

நாகர்கோவில்: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

திருவனந்தபுரத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம், மே 30-ஆம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று, அங்குள்ள தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மே 31), சனிக்கிழமை (ஜூன் 1) ஆகிய நாள்களிலும் தியானத்தில் ஈடுபடும் மோடி, ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் ஆகியோர், பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடம், விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கன்னியாகுமரி கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.