கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே விவசாயி ஒருவர் சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் விவசாயி. இவர் தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்துள்ளார்.

முள்ளங்கியை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளார். தற்போது முள்ளங்கி அமோக விளைச்சல் விளைந்துள்ளது. இந்நிலையில் சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் தற்போது சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கியை வியாபாரிகள் ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
1 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அதனைப் பறித்து எடுக்கும் கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த முறை பயிர் செய்த போது ஒரு கிலோ முள்ளங்கி ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்துள்ளார். அதனை நம்பி பயிர் செய்து தற்போது பெரிய நஷ்டமடைந்துள்ளதாகக் கூறுகிறார் விவசாயி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


