/

எடப்பாடி பழனிசாமியின் ராஜிநாமா ஏற்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:09 pm

DIN

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து 15-வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் அவர் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிசாமி ராஜிநாமா செய்தார்.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.