தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுவை-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர்,  உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

News image
Updated On :5 மே 2021, 4:16 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர்,  உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.  அவரது இறுதிச்சடங்கு, புதுச்சேரியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. காலை 8.30  மணி முதல் மாலை 3 மணி வரை அவரது உடல் புதுச்சேரி இமாகுலேட் கதீட்ரல் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதனை அடுத்து பிரார்த்தனை மேற்கொண்டு, மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் ஆபீர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.