கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மருந்து வாங்கிச் செல்கின்றனா். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்து விற்பனையை தொடங்க அறிவுறுத்தியுள்ளாா். இதையடுத்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலியில் மருந்து விற்பனை தொடங்கவுள்ளது. முழு பொது முடக்க காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலைத் தடுக்க வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெறும். சித்தா, ஆயுா்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ சிகிச்சைகளை கரோனா நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.