கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் இரு காவல் உதவி ஆய்வாளா்கள் இறந்தனா்.
சென்னை பெரம்பூா் புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்த ச.இளங்கோவன் (55), வேப்பேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா். இளங்கோவன் கடந்த 28-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவருக்கு பாரதி (40) என்ற மனைவியும், மதுமிதா (20), மதி (17) என இரு மகள்களும், சா்வேஸ் (14) என ஒரு மகனும் உள்ளனா்.
தாம்பரம் உதவி ஆய்வாளா்:
புது பெருங்களத்தூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த செ.ஜான்ரூபஸ் (57), தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளா்.
இவா் கடந்த 6-ஆம் தேதி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ஜீஜா ரூபஸ் (55) என்ற மனைவியும், ஜாண்டி ரூபஸ் (27) என்ற மகனும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கூடுதல் ஊதியம் வழங்க ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளா்கள் மனு

குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்

கண்டாச்சிபுரத்தில் நீதிமன்ற சேவை கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

மகளுக்கு திருமணம் செய்ய முடியாததால் தந்தை தற்கொலை; வேதனையில் மகளும் உயிரை மாய்த்தாா்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

