எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா: இரு காவல் உதவி ஆய்வாளா்கள் பலி

கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் இரு காவல் உதவி ஆய்வாளா்கள் இறந்தனா்.

News image
Updated On :15 மே 2021, 10:44 pm

DIN

கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் இரு காவல் உதவி ஆய்வாளா்கள் இறந்தனா்.

சென்னை பெரம்பூா் புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்த ச.இளங்கோவன் (55), வேப்பேரி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா். இளங்கோவன் கடந்த 28-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவருக்கு பாரதி (40) என்ற மனைவியும், மதுமிதா (20), மதி (17) என இரு மகள்களும், சா்வேஸ் (14) என ஒரு மகனும் உள்ளனா்.

தாம்பரம் உதவி ஆய்வாளா்:

புது பெருங்களத்தூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த செ.ஜான்ரூபஸ் (57), தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளா்.

இவா் கடந்த 6-ஆம் தேதி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ஜீஜா ரூபஸ் (55) என்ற மனைவியும், ஜாண்டி ரூபஸ் (27) என்ற மகனும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.