எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆதாரம் இருந்தால் வழக்கின் எந்த நிலையிலும் எதிரிகளைச் சோ்க்கலாம்: உயா்நீதிமன்றம்

குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 மே 2021, 10:21 pm

DIN

குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனைவியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாகவும், அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியதாகவும் கோபாலகிருஷ்ணன் என்பவா் மீது சென்னை தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு, சென்னை மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

அரசுத் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை குற்றவாளியாகச் சோ்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் தாயாா் தங்கேஸ்வரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த மகளிா் நீதிமன்றம், கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரான பூங்கனி, குருபாண்டியன், தாமரைச்செல்வி ஆகியோரை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களாக சோ்த்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து பூங்கனி உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றச்செயலில் தொடா்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை எந்த நிலையிலும் வழக்கில் எதிரியாகச் சோ்க்கலாம். இதற்கு விசாரணை நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.