அதேபோல, காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகனச் சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், விதிகளை மீறி வெளியில் வரும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம், வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அம்மா உணவகம், பொது நிவாரணம் வழங்குவதற்கான நியாயவிலைக்கடைகள் காலை 8 முதல் 12 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.