ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு: கூடுதலாக 40 படுக்கை, ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்கம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமையில் நடந்தது.

News image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாட்டினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Updated On :26 மே 2021, 6:49 am


ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டில் கூடுதலாக 40 படுக்கை மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமையில் நடந்தது.

செயல்பாடுகளை துவக்கிவைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனையில் 131 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை உள்ளது. புதிதாக 40 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை ஏற்படுத்தப்பட்டு 171 என உயர்ந்துள்ளது. 10 நாளில் இதனை 250 படுக்கையாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியுடன் வருவோரை தங்க வைக்க தனிவசதி செய்ய உள்ளோம்.
நோயாளிகளின தேவையைப் பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் உள்ளனர். தன்னார்வலர் பணி செய்ய விரும்பும் நபர்கள் எங்களை அணுகி சேவையை தொடரலாம்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

BNI அமைப்பு மூலம் 50 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தியுடன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினர். அதன் செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன், 24 மணி நேரமும் வழங்க முடியும். இதனை 100 படுக்கைக்கு வழங்கும்படி தரம் உயர்த்தும் பணி நடக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிக்கு சிகிச்சை தருவதில் சிக்கல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். நோயாளிக்கு சிகிச்சை தர தாமதம் செய்யக்கூடாது. இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.