தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கரூர்: கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்

கரூர் வளதாம்பாளையம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். 

News image
Updated On :31 மே 2021, 6:37 am

DIN

கரூர் வளதாம்பாளையம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். 

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து கரூர் வளதாம்பாளையம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 200 படுக்கைகளில் 156 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. 

இந்த கரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார். 

இந்த நிகழ்வில் கரூர் எம்.பி. ஜோதிமணி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.