முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

Updated On :1 நவம்பர் 2021, 6:01 pm IST


சென்னை: தமிழகத்தில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது குறித்து, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளையில், அதிக ஒலி, ஒளி மாசினை ஏற்படுத்தும் சரவெடிகளைத் தவிர்க்குமாறும், அமைதிகாக்க வேண்டிய மருத்துவமனை, பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள இடங்களிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பொறுப்புணர்ச்சியோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறும், எந்த வகையிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.