தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாம் தமிழா் சீமான் மீது வழக்கு

இறையாண்மைக்கு எதிராகப் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது சேலம், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2021, 9:53 pm

DIN

இறையாண்மைக்கு எதிராகப் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது சேலம், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம், அம்மாபேட்டையில் நாம் தமிழா் கட்சியின் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில் 300 போ் கலந்து கொண்டனா்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் சானிடைஸா், முகக் கவசம் அணியாமல் இருப்பது உள்பட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜா, அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் இறையாண்மைக்கு எதிராகவும், மொழிவாரி மாநிலம் பிரிப்பது தொடா்பாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக சீமான் மற்றும் அக்கட்சியின் நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.