நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகை மாவட்டத்தில் பலத்த மழை நீடிப்பு: குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.

News image

மழை நீரால் சூழப்பட்ட நாகை வ.உ.சி தெரு குடியிருப்புப் பகுதி

Updated On :3 நவம்பர் 2021, 8:04 am

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.  நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் சற்றுக் குறைந்திருந்த மழை சீற்றம், மாலையிலிருந்து மீண்டும் அதிகரித்தது. மாலை 6 மணியிலிருந்து இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. 

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக நாகையில் 128.6 மி.மீட்டர் (12.8 செ.மீ) மழை பதிவானது. திருப்பூண்டியில் 84.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 70.8 மி.மீட்டரும், வேதாரண்யத்தில் 49.6 மி.மீட்டரும் மழை பதிவானது. 

Story image

கனமழையால் கடலைப் போல காட்சியளித்த நாகை புதிய கடற்கரை

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை பலத்த மழை நீடித்தது.  அதன் பின்னர் மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்தது.

நீடித்து வரும் கனமழை காரணமாக, நாகை வ.உ.சி தெரு, நாகூர் எம்.ஜி.ஆர் நகர் உள்பட நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புகள் புதன்கிழமை மழை நீரால் சூழப்பட்டன. இதனால், அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

நீடித்து வரும் மழையின் காரணமாக, தீபாவளி பண்டிகை வர்த்தகத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தரைக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மழை குறுக்கீடால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.