பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருவள்ளூர் பகுதிகளில் தொடர்மழையால் நிரம்பும் ஏரிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாள்களாக பெய்து வரும் மழையால் 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 நவம்பர் 2021, 4:38 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாள்களாக பெய்து வரும் மழையால் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் உள்ள 336 ஏரிகளில், 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாகவும் மற்றவைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில், இரவு முதல் புதன்கிழமை காலை வரையில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. இம்மழையால் கொசஸ்தலையாறு உப நீர் வடி நிலப்பகுதிகளில் உள்ள கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொசஸ்தலையாறு உபநீர் வடி நிலப்பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 336 ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மழையால் அயத்தூர், நயபாக்கம், ரங்காபுரம், நெமிலி, கரம்பேடு உள்ளிட்ட 39 ஏரிகள் முழு அளவில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும், 75 முதல் 90 சதவீதம் வரையில் 23 ஏரிகளும், 50 முதல் 75 சதவீதம் வரையில் 31 ஏரிகளும், 50 சதவீதம் 83 ஏரிகளும், 25 சதவீதம் 144 ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை அளவு விவரம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி மி.மீட்டரில் பதிவான மழை அளவு விவரம். பூந்தமல்லி-37, திருவள்ளூர்-36, பொன்னேரி-34, திருவாலங்காடு-28, தாமரைபாக்கம்-22, சோழவரம்-19, பூண்டி-15, ஜமீன்கொரட்டூர்-15, செங்குன்றம்-12, கும்மிடிப்பூண்டி, திருத்தணி தலா-4, ஆர்.கே.பேட்டை-3 என 229 மி.மீட்டரும், சராசரியாக 16.35 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.