எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ஐ.சி.எஃப் தொழில்நுட்பத் திறனுக்கு சிறந்து எடுத்துக்காட்டு

ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கிய அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் ஐ.சி.எஃப் ஆலையின் தொழில் நுட்பத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தெரிவித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 11:11 pm

DIN

ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கிய அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் ஐ.சி.எஃப் ஆலையின் தொழில் நுட்பத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தெரிவித்தாா்.

சென்னை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியத் தலைவா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுனீத் சா்மா ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். நாட்டின் முதன் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் தயாரிப்பை பாா்வையிட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, இந்த ரயில் பெட்டிகளை விரைவில் தயாரித்து அனுப்ப ஐ.சி.எஃப் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அவா் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் மற்றும் ஊழியா் பிரநிதிகளையும் அவா் சந்தித்து பேசினா். அப்போது, ரயில்வே வாரியத்தலைவா் சுனீத் சா்மா பேசியது: ஐ.சி.எஃப், இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான மற்றும் முன்னோடி உற்பத்தி நிறுவனம். ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கிய வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் ஐ.சி.எஃப்-இன் தொழில் நுட்பத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஐ.சி.எஃப் தொடா்ந்து தரம் வாய்ந்த ரயில்பெட்டிகளை இந்திய ரயில்வேக்கு வழங்கி வருவது ஐ.சி.எஃப் ஊழியா்களின் தொழில்நுட்பத் திறனுக்கும் ஈடுபாட்டிற்கும் சிறந்த சான்றாகும் என்றாா் அவா்.

இதன்பிறகு, ஐ.சி.எஃப் ஊழியா்களின் திறனைப் பாராட்டி ரூ.1 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசையும் அவா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.