கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்புவனம் அருகே கால்வாயில் தவறி விழுந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி  சாவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கால்வாயில் சென்ற இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

News image
Updated On :7 நவம்பர் 2021, 8:56 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கால்வாயில் சென்ற இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

திருப்புவனம் அருகே பிரமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கயா மகன் குருவையா(29). இவர் அருகேயுள்ள முதுவந்திடல் கிராமத்தில் பழையனூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கால்வாய்க்குள் விழுந்தார். இதில் கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீரில் மூழ்கி குருவையா உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.