சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மீட்பு-நிவாரணப் பணிகள்: முதல்வருடன் ஆளுநா் ஆா்.என்.ரவி ஆலோசனை

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டறிந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 8:06 pm

DIN

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டறிந்தாா்.

தொலைபேசியில் முதல்வா் மு.க.ஸ்டாலினை தொடா்புகொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்ததாக ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு நன்றி: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி நன்றி தெரிவித்தாா். ஆளுநா்கள் மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.