இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் காயம்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார். 

News image

சீர்காழி நாகை மேல வீதியில் இடிந்து விழுந்த பழனி வீட்டின் பக்கவாட்டு சுவர்.

Updated On :12 நவம்பர் 2021, 3:18 am

சீர்காழி: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார். 

வடகிழக்கு பருவமழை கடந்த 28 ஆம் தேதி இரவு தொடங்கியது. இது தீவிரமடைந்து  தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சீர்காழி பகுதியில் தாழ்வான பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் அருகிலுள்ள நாகை மேல வீதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சூர்யகுமார் (16). பாலிடெக்னிக் மாணவர். நேற்று வியாழக்கிழமை இரவு சூர்யகுமார் வீட்டின் கழிப்பறையில் இருந்த போது பக்கவாட்டு சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில்  காயம் அடைந்த சூர்யகுமாரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.