திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் என்.ரங்கசாமி.

News image
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்திப்பில் நிவாரண உதவியை அறிவித்த முதல்வர் என். ரங்கசாமி.
Updated On :12 நவம்பர் 2021, 9:09 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் என்.ரங்கசாமி.
 
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்.26 ஆம் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. இதில் மழை வெள்ள நீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளும் சேதமடைந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் என். ரங்கசாமி நிவாரண உதவியை அறிவித்தார்.

அதாவது மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், உயிரிழந்த ஆடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

சேதமடைந்த அனைத்து விவசாயிகளும் வரும் மழைக் காலத்துக்கு பின் உடனடியாக 100 சதவிகிதம் சீரமைக்கப்படும்.

விரைவில் சாலைகள் மேம்பாட்டு பணி: 
விரைவில் சாலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் பார்வையிட்டு உள்ளேன். தொடர்ந்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.

பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தொடர்ந்த அனைத்து தரப்பினருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி கூறினார். 

முதல்வருடன் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அனைத்து துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.