ஆரணி ஆற்றின் கரை உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது: மக்கள் மீட்பு
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெள்ளிக்கிழமை கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.








