கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்திரசேகர் வசிக்கும் வீட்டின் மேற்கூரை பூச்சு, திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில், சந்திரசேகரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், ரமேஷின் மனைவி புனிதா (34), இவரது மகன் புர்னேஷ் (2) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இந்த மூன்று பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.