புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 141 அடியாக உயர்வு: 2-ம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

முல்லைப் பெரியாறு அணை.

Updated On :18 நவம்பர் 2021, 6:31 am

DIN


கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறையினர் விடுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் 142 அடியை எட்டியது. அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு, 3,342 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம், 141 அடியை எட்டியது தமிழக பொதுப்பணித்துறை தேக்கடியில் உள்ள  அலுவலக அணையின் உதவி பொறியாளர் பி.ராஜகோபால், 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை, திங்கள்கிழமை வெளியிட்டார்.

ஏற்கனவே கடந்த நவ.14 இல், அணையில் நீர் மட்டம், 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ  வேண்டாம் எனவும், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வீட்டில் தங்காமல்  முகாம்களில் தங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 141 அடியாக இருந்தது (மொத்த உயரம் 142 அடி ) அணையில் நீர் இருப்பு, 7,396 மில்லியன் கன அடி,  நீர்வரத்து விநாடிக்கு 3,342 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாக இருந்தது.

மின் உற்பத்தி
முல்லைப்பரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த நவ. 14 முதல் விநாடிக்கு, 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் எதிரொலியாக லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து 4 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என மொத்தம் நான்கு மின்னாக்கிகளில் 168 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தியாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.