கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்.
Published on
Updated on
1 min read



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த அனைத்து அணைகளில் பிரதான மதகுகள் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் ,2,4,5,6 ஆகிய  பிரதான மதகுகளிலிருந்து வினாடிக்கு 8,409 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 7 மணி அளவில் பெய்த மழை அளவு (மி.மீ): ஊத்தங்கரை -136.8, பெனுகொண்டபுரம் -114.16, போச்சம்பள்ளி -112.2, பாரூர் -105,4, கிருஷ்ணகிரி -102-4, தேன்கனிக்கோட்டை -101, சூளகிரி -97, ஓசூர் -94.6, நெடுங்கல் -87.6, தளி - 36, ராயக்கோட்டை -33, அஞ்செட்டி -27. மொத்த மழையளவு - 1047.96. 

அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும்.  தற்போது 51.25 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,026 கன அடி நீர் வரத்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com