காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை தொடர்வதால், மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6.45 மணி நிலவரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
7.25 மணி நிலவரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
7.30 மணி நிலவரம்: கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
9.00 மணி நிலவரம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
9.50 மணி நிலவரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை