அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழு

கடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

News image
கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் வீடு சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர்.
Updated On :23 நவம்பர் 2021, 7:34 am

DIN

கடலூர்: கடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆற்றில் மொத்த கொள்ளளவான 1.05 லட்சம் கன அடிக்கு பதிலாக 1.20 லட்சம் கன அடி நீர் சென்றது. இதனால், மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 100 நகர் பகுதிகள், சுமார் 60 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. சுமார் 2,400 வீடுகள் சேதமடைந்தன. 750 கால்நடைகள் உயிரிழந்தன.

வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் இன்று காலை கடலூர் வந்தனர். பெரிய கங்கணாங்குப்பத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், வெள்ளநீர் தேங்கியுள்ள தெருக்களையும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ள சேத புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, புதுச்சத்திரம் அருகில் உள்ள பூவாலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மத்தியக் குழுவைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகளான விஜய் ராஜ்மோகன், ரஞ்சன் ஜாய் சிங், எம்.வி.என்.வரபிரசாத், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், சட்டப் பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.