40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனது

பெட்ரோல், டீசல், விலைகளை எல்லாம் தாண்டி தக்காளி விலை உச்சம் தொட்டிருப்பதால், சுட்டுரையில் இன்று தக்காளி டிரெண்டிங் ஆகியுள்ளது.

News image

விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனது

Updated On :24 நவம்பர் 2021, 6:08 pm IST

பொதுவாக வெங்காயத்தை நறுக்கும்போதுதான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இன்றைய விலை நிலவரமோ, தக்காளியை நினைத்தாலே கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. பெட்ரோல், டீசல், விலைகளை எல்லாம் தாண்டி தக்காளி விலை உச்சம் தொட்டிருப்பதால், சுட்டுரையில் இன்று தக்காளி டிரெண்டிங் ஆகியுள்ளது.

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

இந்திய அளவில், சுட்டுரைப் பக்கத்தில் தக்காள் விலை என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Story image

தமிழகத்தில் தக்காளி விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த பலத்த மழை காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக அதிகரித்தது. விளைநிலங்களில் மழைநீா் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் தக்காளி அழுகியதும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததுமே அதன் விலை உயா்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

பொதுவாக, ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி, மழைக் காலம் தொடங்கியதும் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், இந்த முறை, தொடர் கனமழை காரணமாக, தென்னிந்திய மாநிலங்களில் ரூ.140 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதத்தில் தொடங்கிய விலை உயர்வு, நவம்பர் மாத இறுதி வரை நீடிக்கிறது. ஒரு பக்கம் கனமழையைக் காரணம் காட்டினாலும், மறுபக்கம், விலைச் சரிவு காரணமாக, ஏராளமான விவசாயிகள் தக்காளி அறுவடையை தவிர்த்துவிட்டதாகவும், மிகக் குறைந்த தக்காளியே அறுவடை செய்யப்பட்டிருப்பதும் விலையேற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.