ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

News image
திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்
Updated On :24 நவம்பர் 2021, 12:40 pm

DIN


தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

ஆறுகள் பலவும், தங்களுக்குரிய நீர்ப்பரப்புகளை கைப்பற்றியவர்களிடமிருந்து எந்தவித சண்டையும் சச்சரவும் இன்றி, வழக்கும், தீர்ப்பும் இன்றி மீண்டும் அபரிகத்துக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியது. 

காவிரி, யமுனைக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு பாலாறும் தனது பலத்தை நிரூபித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக சில சிற்றாறுகளின் பெயர்களும் செய்திகளில் அடிபட்டன.

பல பகுதிகளில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், தேர்வாய்க்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Story image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்ட நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரி: ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தற்போதைய மொத்த கொள்ளளவு 2,944 மில்லியன் கனஅடியாகவும், ஏரிக்கு நீா்வரத்து 750 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து 2,149 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி - மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 2,464 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 8,444 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 9,243 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் - மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 797 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 614 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேர்வாய்கண்டிகை - மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 500 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 149 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ரெட்ஹில்ஸ் - மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 2,807 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு ,1212 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 1,698 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.