மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

News image

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி.

Updated On :25 நவம்பர் 2021, 7:15 am


கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கோவையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீஸார், போக்சோ வழக்குப் பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவை விசாரித்த நீதிமன்றம், மிதுன் சக்ரவர்த்தியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.