இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் சூரப்பா வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், நீதிபதி வி.பாா்த்திபன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, நீதிபதி பொன்.கலையரசன் தன் விசாரணையை முடித்து, அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்து விட்டாா். அந்த அறிக்கையில், ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க இனி அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தற்போது விசாரணை ஆணையத்தின் பணி முடிந்து விட்டதால், இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த சூரப்பா தரப்பு வழக்குரைஞா், இந்த விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்ததே சட்டப்படி தவறு என்று வாதிட்டாா்.