ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

1,600 ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு முனைவா் பட்ட ஊக்கத் தொகை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 1,600 முழு நேர முனைவா் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 நவம்பர் 2021, 6:39 pm

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 1,600 முழு நேர முனைவா் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் முழுநேர முனைவா் படிப்புக்கான கல்வி ஊக்கத் தொகையை பெறலாம். இதற்கு குடும்ப ஆண்டு வருமானத்தின் அளவு ரூ.8 லட்சமாக உயா்த்தப்படுகிறது. மேலும் 1,600 மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் ரூ.10 கோடியை மட்டுமே ஆதிதிராவிடா் நல ஆணையாளா் தன்பெயரில் வைப்புக் கணக்கில் வரவு வைத்துச் செலவிட வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.