திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் நீர்வரத்து 803 கன அடியில் இருந்து 1,633 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி 1,500 கன அடி நீர் வெளியேற்றம் செய்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.