இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிா் போலீஸில் இருதரப்பினரும் புகாா் செய்தனா். இந்தப் புகாரை விசாரித்த காவல் ஆய்வாளா் சிவகாமி, சேலம் குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகளிடம் சிறுமியை ஒப்படைத்தாா். அந்த சிறுமி காப்பகத்தில் அடைக்கப்பட்டதும், கலக்கம் அடைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கதறி அழுதாா். இந்த விடியோவைப் பாா்த்த உயா் நீதிமன்ற குழந்தைகள் நலக்கமிட்டி நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சேலம் சிறாா் நீதிமன்ற நீதிபதிக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தாா். இதற்கிடையில், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் வளா்ப்புத் தாய் சத்யாவும், பெற்ற தாய் சரண்யாவும் தனித்தனியாக ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்தனா்.