ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

13 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாமக்கல் தூசூர் ஏரி!

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிரம்பியது.

News image
தூசூர் ஏரி நிரம்பி சாலையில் வழிந்தோடும் தண்ணீரை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் அந்த பகுதி மக்கள். 
Updated On :28 நவம்பர் 2021, 8:51 am

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிரம்பியது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக முப்பது ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 38 ஏரிகள் நிரம்பாமலும், 11 ஏரிகள் பாதி அளவிலும் நிரம்பியுள்ளன. 

இந்த மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக கருதப்படுவது நாமக்கல் -துறையூர் சாலையில் உள்ள தூசூர் ஏரி. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் அருகில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் தூசூர் ஏரி வறண்டு காட்சியளித்தது. 

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. இந்த ஏரியானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிலைமை என்பது வருவாய்துறை கட்டுப்பாட்டிலும், அங்குள்ள மரங்கள் வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. 

ஆண்டுதோறும் குறுவை, சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் முப்போகம் விளையும் வகையில் தூசூர் ஏரி நீர் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்தது. 

கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாதது அப்பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தி இருந்தது. இநத நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூசூர் ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதி மக்கள் ஏரிக்குள் பூத்தூவி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சிறுவர்களும், பெண்களும் ஏரியில் தண்ணீர் வழிந்து வருவதை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 

Story image

தூசூர் ஏரி நிரம்பி ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்து வருவதை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் மக்கள்.

சாலையில் கடந்து செல்லும் நீர் தடுப்பணை போல் காட்சியளிப்பது அவ்வழியாக வாகனங்களில் செல்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தில்லை சிவக்குமார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான ஏரி தூசூர் ஏரி ஆகும். கொல்லிமலை அடிவாரம் வழியாக வழிந்தோடி வரும் தண்ணீர் முத்துகாப்பட்டி ஏரி, பாப்பன்குளம் ஏரி, சின்ன ஏரி, பெரிய ஏரி வழியாக தூசூர் ஏரியை வந்தடைகிறது. அங்கிருந்து அரூர் ஏரி, ஆண்டாள்புரம் ஏரியை சென்றடைந்து பின்னர் காவிரியில் கலக்கிறது. 

13 ஆண்டுகளுக்குப் பின் ஏரி நிரம்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் இப்பகுதியில் விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.