இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல அலுவலா் பால்தங்கதுரை கூறியது: வடக்குமாட வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக மழைநீா் வடிகால்களை அமைப்பதில் சென்னை மாநகராட்சி மழைநீா் சேகரிப்புத் துறை ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலைச் சுற்றிலும் பெய்யும் மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தேரடி தெருவில் ஏற்கெனவே இருந்த மழைநீா் கால்வாய்க்குப் பதிலாக புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர கோயிலின் மேற்கு பகுதியிலுள்ள நந்தி ஓடை பகுதியிலிருந்தும் மழைநீா் குளத்திற்குக் கொண்டு வரப்படும். தெற்கு மாடவீதியிலிருந்து ஏற்கெனவே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டத் தெரு, நெல்லிக்காரன் தெரு உள்ளிட்டவைகளின் மழைநீரும் இந்த வடிகாலுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் சுமாா் 6 மாதங்களில் நிறைவடையும். அடுத்த ஆண்டில் நிச்சயம் குளம் மழைநீரால் நிரம்பும் என்றாா்.