
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி முல்லை பெரியாறு அணையில் இன்று (நவ.30) 142 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் நாள்களில் கேரள அதிகாரிகளுக்கு முன்னரே தெரியப்படுத்தியபின் நீர் வெளியேற்றப்படும். உச்சநீதிமன்ற ஆணைப்படி முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்த எஞ்சிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.