தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீர்: 15,000 மூட்டைகள் சேதம்

சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 15,000 மூட்டைகள் சேதமடைந்தன.

News image
சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீர்: 15,000 மூட்டைகள் சேதம்
Updated On :30 நவம்பர் 2021, 10:28 am

DIN

சீர்காழி: சீர்காழி அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் குளம் போல் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 15,000 மூட்டைகள் சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் சாலையில்  டி. மணல்மேடு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. 

Story image

இந்த கிடங்கில் சீர்காழி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை இந்த இடத்தில் கொண்டுவந்து சேமித்து வைத்து பின்னர் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் மேற்கண்ட திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஒரு லாட்டிற்கு 3000 மூட்டை வீதம், 23 லாட்டில் 4,752 டன் அதாவது 1.90 லட்சம்  நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

Story image

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் சுமார் 15,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது .மேலும் சேமிப்புக் கிடங்கு முழுவதும் 3 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் அப்புறப்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்ததால் நேற்று மயிலாடுதுறை மாவட்ட துணை மேலாளர்( தரக்கட்டுப்பாடு) முத்தையன் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியோடு சேமிப்பு கிடங்கு வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை பம்புசெட்டு மூலமும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரி கூறுகையில், சேமிப்புக் கிடங்கில் சூழ்ந்துள்ள மழை நீரினை உடனடியாக  அகற்றப்பட்டு இங்குள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் இரண்டு நாட்களுக்குள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.