தமிழகத்தில் இன்று மேலும் 1,531 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4.74 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 68,495 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 184 பேருக்கும், கோவையில் 158 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,582 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- பஞ்சாபை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 15,873-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,972 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 23 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,650-ஆக அதிகரித்துள்ளது.