உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
உத்தர பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளா் உட்பட ஒன்பது போ் பலியாகி இருக்கிறாா்கள். அதைத் தொடா்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது.
கடந்த 300 நாள்களாக விவசாயிகள் போராடி வருகிறாா்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகளாகும். இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவா்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

