ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யவில்லை: விமானப்படை தளபதி

கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யவில்லை

Published On :28 ஜனவரி 2024, 9:48 am IST

கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை செய்யவில்லை என விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

28 வயதாகும் பெண் விமானப் படை அதிகாரி, கோவையிலுள்ள இந்திய விமானப் படை கல்லூரியில் மற்றொரு விமானப் படை அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்த புகாரை திரும்பப் பெற இந்திய விமானப் படை அதிகாரிகளால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பதை அறிய, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு தான் உள்படுத்தப்பட்டதாகவும், பிறகுதான், அந்த சோதனை தடை செய்யப்பட்டது என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமானப்படை தளபதி பேசியது,

“இதுபோன்ற பாலியல் சம்பவத்திற்கு விமானப்படையின் சட்டத்தில் தண்டனை மிக கடுமையாக உள்ளது. மேலும், பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விதிகளை நன்று அறிவோம். மேலும், இந்த சம்பத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.