சேலத்தில் சிவன் ஆலயங்களில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்: கேள்விக்குறியான கரோனா பாதுகாப்பு விதிகள்
மகாளய அமாவாசையையொட்டி இன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக சேலத்தில் சிவன் ஆலயங்களில் ஏராளமானோர் குவிந்ததால் கரோனா பாதுகாப்பு விதிகள் கேள்விக்குறியானது.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோயில் முன்பு உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் புதன்கிழமை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்த பொதுமக்கள்.









