முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பூம்புகாரில் கடலில் நீராட தடை: வெறிச்சோடி காணப்பட்ட பூம்புகார் சங்கமத் துறை

கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது பூம்புகார் சங்கமத் துறை.

News image

காவிரியில் நீராடி தர்ப்பணம் செய்த குறைவான உள்ளூர் மக்கள். 

Updated On :6 அக்டோபர் 2021, 10:11 am IST


பூம்புகார்: கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது பூம்புகார் சங்கமத் துறை.

தங்களுடைய மூதாதையர் நினைவாக மாதம்தோறும் அமாவாசை அன்று தர்பணம் கொடுத்து வழிபடுவது இந்துக்களின் மரபாக இருந்து வருகிறது. 

தற்போது நவீன காலத்தில் மாதம் தோறும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்தால் நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதாக புராணங்களில் கூறப்படுகிறது. 

Story image

கரோனா காரணமாக மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகாரில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் கடற்கரை.

காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் நீராடி வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை பெறலாம் என்பது ஐதீகம். ஆனால் தற்போது கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்திருந்தார். 

புதன்கிழமை மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகாரில் நீராட பக்தர்கள் வராததால், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. ஆனாலும் உள்ளூர் குறைவான பொதுமக்கள் காவிரியில் நீராடி தர்ப்பணம் செய்தனர். 

தர்ம குளம் கடைவீதியில் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு, கடற்கரைக்கு பக்தர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.